1500 ஏக்கர் நெற்செய்கையைக் காப்பாற்றிய கல்முனை நீர்பாசன காரியாலயம்!

0
142

அம்பாறையில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையால், நீரில் மூழ்கியிருந்த ஆயிரத்து 500 ஏக்கர் நெற் செய்கை, வெள்ளம் வடிந்தோடச்
செய்யப்பட்டுக் காப்பற்றப்பட்டுள்ளது.
கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளரின் பராமரிப்பிலுள்ள மாவடிப்பள்ளி, பள்ளாறு ஆற்றுவாழை களினால் மூடப்பட்டதன்காரணமாகவே வயல் நிலங்கள் நீரில்
மூழ்கும் நிலையேற்பட்டது.
வெள்ளப் பாதிப்புத் தொடர்பில், கல்முனை நீர்;பாசன பொறியியலாளரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, நீர்ப்பாசன காரியாலய தொழில்நுட்பவியலாளர்கள்
விரைந்து நடவடிக்கை எடுத்து, நீரேந்து நிலைகளில் காணப்பட்ட ஆற்று வாழைகளை அகற்றினர்.
இது நீர் வடிந்தோட ஏதுவாக அமைந்ததால், வயல் நிலங்களில் இருந்த மேலதிக வெள்ள நீர் வடிந்தோடியது.