20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

0
182

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சினோபாம் மற்றும் பைஸர்
தடுப்பூசிகள் ஏற்றும் விசேட நடவடிக்கை 03ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுசுகாதார பிரிவுகளில் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான 20வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் 15 பொதுசுகாதார பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு வெட்டுக்காடு மற்றும் திராய்மடு ஆகிய பொதுசுகாதார பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 6ஆம் திகதி கருவப்பங்கேணி மற்றும் புதூர் பொதுசுகாதார பிரிவுகளிலும், 7ஆம் திகதி மாமாங்கம் மற்றும் அரசடி பொதுசுகாதார பிரிவுகளிலும், 8ஆம் திகதி கல்லடி பொதுசுகாதார பிரிவிலும் ,9ஆம் திகதி கொக்குவில் மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பிரிவுகளிலும் 10ஆம் திகதி அமிர்தகழி மற்றும் கல்லடி இசைநடன கல்லூரி ஆகிய பொதுசுகாதார பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்
இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.