28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

200 குடும்பங்களுக்கு தலா 3000 ரூபாய்க்கு உணவுப் பொதிகள்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தில் கொரோனா தொற்று மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்துள்ள மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உறங்கவிழிகள் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கனடா நிதி பங்களிப்பில் புதிய வாழ்வு மற்றும் கிறீன் பியூச்சர் நேசன் பவுண்டேசன் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, மட்டக்களப்பின் பட்டிப்பளை, கிரான், ஓட்டமாவடி, ஏறாவூர்பற்று, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மிகவும் வறுமைப்பட்ட 1000 குடும்பங்களுக்கு இவ் நிவாரணப்பொதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles