பாடுமீன் சதுரங்க கழகத்தினால் பாடசாலை மானவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட திறந்த சதுரங்க சுற்றுப் போட்டியில், வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு, பணப் பரிசுடன் சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
பாடுமீன் சதுரங்க கழக செயலாளர் அருள்ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன்,
கலந்து கொண்டார்
8 சுற்றுப்போட்டிகளாக மூன்று நாள் நடைபெற்ற சதுரங்க போட்டியில், அகில இலங்கை ரீதியில் 250 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டர்.
நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் ஈஸ்வரன், மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய அதிபர் அருமைதுரை. பாடுமீன் சதுரங்க கழக ஆலோசகர் அழகுதுறை ஜெயகரன், பாடுமீன் சதுரங்க கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்