2024 ஆம் ஆண்டுக்கான, தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில், வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
காலி போத்திவெல தேசிய பாடசாலையில், இளையோர், கனிஷ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி, கடந்த 23, 24, 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இதில், வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப் பதக்கத்தையும், ஒருவர் சில்வர் பதக்கத்தையும், மற்றொருவர் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
பா.கிசாளினி, 49 கிலோ எடை பிரிவில் 80 கிலோ எடையை தூக்கி முதலாம் இடத்தையும்,
த.வன்சிகா, 64 கிலோ எடை பிரிவில் 44 கிலோ எடையை தூக்கி முதலாம் இடத்தையும்,
க.அபிசாளினி, 81 கிலோ எடை பிரிவில் 70 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடத்தையும்,
ச.அனுஷா, 59 கிலோ எடை பிரிவில் 61 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடத்தையும் பெற்று, பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சியை, ஆசிரியர் ஞானஜீவன் வழங்கியுள்ளார்.