4 வைத்தியர்கள் உட்பட நாவலப்பிட்டி வைத்தியசாலையில் 22 பேருக்குக் கொரோனா!

0
138

நாவலப்பிட்டி வைத்தியசாலையின் நான்கு வைத்தியர்கள், மூன்று தாதியர்கள், மருந்தாளர்கள் உட்பட 22 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதையடுத்து வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவில் சேவையாற்றும் சுகாதார அதிகாரிகளுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் நாவலப்பிட்டி நகரில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டுள்ளார். இதனால் பலருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.