ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 40 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையான புற்றுநோய்கள் காணப்பட்டாலும் சிறுவர்கள் மத்தியில் லுகேமியா எனும் புற்றுநோய் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தாலும், பெற்றோர்கள் மத்தியில் போதுமானளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சிகிச்சையின்றி அதிகளவான சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் வருடாந்தம் 2 முதல் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரவின் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.