முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 400 ற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுடன் தனது 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மகிந்தவின் பிறந்தநாளை ஒட்டி நேற்றையதினம் கம்பஹா மாவட்ட செயலகத்தில் தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது, 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் நிதியுதவி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், வேறு ஒருவர் ஏற்பாடு செய்திருந்த தான நிகழ்வுக்கு தான் வந்ததாக நிகழ்வின் பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.