உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.