7 பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்!

0
123

தொழில்பயிற்சி அதிகாரசபை அதிகாரி ஒருவர் பொலிஸ் தடுப்பில் மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் உட்பட 7 பேரும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஹிக்கடுவையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.