8.4 மில்லியன் ரூபாய் மோசடி: சீனப் பெண் கைது

0
90

8.4 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கடந்த சனிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சீனப் பெண் தற்போது கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.