தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் ஆரம்ப நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்
ஜீவராஜ், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கே.இதயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வி.சிறிநாத் உட்பட உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களில் வசிக்கும் தெரிவுசெய்யப்பட்ட 2800 குடும்பங்களுக்கு இந் நிவாரணப் பொருட்கள் சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச பொருனாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக 29 கிராம சேவகர் பிரிவுகளிலும் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.