மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மத்தியஸ்தம் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் எனும் கருப்பொருளில் நிறைவு செய்யப்பட செயற்திட்டத்தில் அடைப்பட்ட அடைவுகள் ,காணி மத்தியஸ்தம் வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் ,கற்றுக்கொண்ட பாடங்கள், அதன் அனுபவ பகிர்வு மற்றும் அதற்கான ஞாபகார்த்த கேடயங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
யுவர் சைட் குளோபல் கொமினிட்டி மற்றும் லிப்ட் நிறுவனங்கள் இணைந்து 2021 ஆம் ஆண்டு முதல் ஒருவருட கால வரையிலான ஆரையம்பதி . காத்தான்குடி . கிரான் ,செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட காணி மத்தியஸ்தம் தொடர்பான வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் ,கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அதன் அனுபவ பகிர்வு தொடர்பான நிகழ்வும் ,அதற்கான ஞாபகார்த்த கேடயங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது .
இதன்போது யுவர் சைட் ( ரளயனை )குளோபல் கொமினிட்டி மற்றும் லிப்ட் நிறுவனங்கள் இணைந்து ஒரு வருடகாலம் ஆரையம்பதி,காத்தான்குடி,கிரான்,செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட காணி மத்தியஸ்த திட்ட செயல்பாடுகள் தொடர்பாககாணிபிணக்காளர்கள் மற்றும் மத்திஸ்தர்களுடான அனுபவ கலந்துரையாடல் அம்கோர் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சிவயோகராஜன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன .
இந்நிகழவில் அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி நவருபரஞ்சனி முகுந்தன் ,ஆரையம்பதி உதவி பிரதேச செயலாளர் .ரோகிணி விவேகானந்தராஜா,காத்தான்குடி பிரதேச செயலாளர் ருத்ரன் உதயஸ்ரீதரன் ,மட்டக்களப்பு மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் ,யுவர் சைட் நிறுவன பிரதிநிதிகளான முகமட் முஸ்தபா நௌசாத்,அனுராதாசியாமளா ஆகியோர் கலந்துகொண்டனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தில்நான்கு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்ட காணி மத்தியஸ்த வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி நவருபரஞ்சனி முகுந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் ஆகியோர் இவாறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்