வவுனியா – பறனட்டகல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், மூவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வாகன சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.