மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிகையின் கீழ் நான்காவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் தரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மண்முனை வடக்கு பொது சுகாதார பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நான்காவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் முதல் கட்டமாக அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான நான்காவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வைத்தியர்கள் ,அலுவலக உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான நான்காவது பூஸ்டர் தடுப்பூசி
ஏற்றுத் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை இதுவரை மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்பாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்