வவுனியா செட்டிக்குளம் நேரியகுளத்தைச் சேர்ந்த நபர், கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக
சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் மூச்சுத் திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கொவிட் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார்.
நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே உயிரிழந்தவராவர்.