மட்டக்களப்பு களுவன்கேணியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பமொன்றுக்கு வீடு உட்பட 30 இலட்சம் பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கப்பட்டது.
லண்டனை தலைமையமாக கொண்டு இயங்கும் லண்டன் ஈலப்பதீஸ்வரர் ஆலய நிருபாக சபையின் அனுசரனையில் 30இலட்சம் பெறுமதியிலான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட களுவன்கேணி 1 இல் உள்ள மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டு வந்த குடும்பம் ஒன்றுக்கே இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது
நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பே.தனபாலசுந்தரம் கலந்து கொண்டு வீட்டினை வீட்டு உரிமையாளரிடம் கையளித்ததோடு சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான வே.வேல்பரமதேவா வாழ்வாதார உதவியினையும் வழங்கிவைத்தார்.
நிகழ்வில் லண்டனை ஈலப்பதீஸ்வரர் ஆலய நிருபாக சபையின் உதவித்திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்கலான லோகநாதன் அனோஜன் நாகராஜா ஆனந்தராஜா இருவரும் களுவன்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
வாழ்வாதார உதவித்திட்டத்தின்போது குறித்த குடும்பத்தின் நன்மை கருதி ஆடுகள் கோழிகள் தாறா இவைகளை வளர்ப்பதற்கான நிரந்தரமான கூடுகள் மற்றும் வியாபார நடவடிக்கு தேவையான துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டதுடன் குறித்த பயனாளி கடல் தொழில் புரிவதற்காக ஒரு தொகை பணமும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.