மக்களால் நிராகரிக்கப்பட்டு பட்டியல் மூலம் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை எதிர்க்கும் செயற்பாடுகளையே மட்டக்களப்பு மாநகரசபைக்குள் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இவர்கள் மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணைகள் மூலம் பொய்யென நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.