அம்பாறை மாவட்டம் காரைதீவு அருள்மிகு பாலையடி பால விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமானது.காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் தலைமையில் மகோற்வ கிரியைகள் இடம் பெற்றன.
காரைதீவு ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து பிரதான வீதி வழிகாக கொடிச்சீலை கொண்டு வரப்பட்டு கிரிகைகள் இடம் பெற்றன.
மகோற்சவ கிரியைகளில் 5ஆம் நாள் மாம்பழத்திருவிழாவும் 7ஆம் நாள் வேட்டைத்திருவிழாவும் 9ஆம் நாள் திருவிழா முத்துச்சப்பர ஊர்வலமும் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 31ஆம் திகதி காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம் பெற்று 01ஆம் திகதி காரைதீவு இந்து சமுத்திரத்தில் தீர்த்தோற்வம் இடம்பெறவுள்ளது.