அம்பாறை மாவட்டம் திருக்கோவில் விநாயகபுரம் பாலக்குடா கோரைக்களப்பு பிரதேசத்தை அண்டிய காணிகளில் செயற்கையாக ஜந்து சிறிய குளங்களை உருவாக்கி அதில் மீன் வளர்ப்பு திட்டங்களை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருந்தன.ஜந்து மீன் வளர்ப்பாளர்களுக்காக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் இன்று விநாயகபுரம் பாலக்குடா கிராமத்தில் வைபவ ரீதியாக இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தொழிநுட்ப உத்தியோகத்தர் என்.சுதர்ஷன் மாவட்ட நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.அபராஜிதன் திருக்கோவில் பிரதேச கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவை உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கிராம மட்டங்களில் காணப்படும் வளங்களை விருத்தி சேய்து பிரதேச மக்களின் நாளாந்த வருமானத்தை அதிகரிக்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.