மட்டு.கருங்காலிச்சேனையில்
காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0
285

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கருங்காலிச்சேனையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜங்கரன் வீதி கிண்ணையடியைச் சேர்ந்த 49 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான பொ.ஆனந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை வாழைச்சேனை பகுதியில் இருந்து மீன்களை கிரான் பிரதேசத்தில் விற்பனை செய்யும் முகமாக எடுத்துச் செல்லும் வேளை வீதியின் குறுக்கே நின்ற யானையானது துரத்தி தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருங்காலிச்சேனை கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் தொல்லை காரணமாக மக்கள் வாழ்வதற்கு அச்சமாக இருப்பதாகவும் யானையின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தி தருமாறு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.