மட்டக்களப்பு சின்ன ஊறணி காந்திகிராம் ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதாரேஸ்வரர் ஆலய சப்பரத்தேர் திருவிழா நேற்றிரவு ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சிவகுமாரக் குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக,ஹோமம் பூஜைகள் நடைபெற்று,
தொடர்ந்து விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கேதாரேஸ்வர சிவனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபதில் சிறப்பு பூஜை இடம்பெற்றது.
அடியார்கள் புடை சூழ வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் அரோகரா கோஷங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார்,சிவன்,முருகன் உள்வீதி வலம் வந்து சப்பரத்தேரில் திருவீதி உலா வந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.