அம்பாறை மாவட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு 12ஆம் பிரிவில் கலைமகள் முன் பள்ளி கட்டிடத்தில் நான்காவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பணிப்பாளர் கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் வழிகாட்டலில் பொது மக்களுக்கான தடுப்பூசிகள் கடந்த வாரங்களாக வழங்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டதில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் பொது மக்களுக்கான தடுப்பூசி அதிகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலாவது தடுப்பூசி 90 வீதமான மக்களுக்கும் இரண்டாவது தடுப்பூசி 85 வீதமான மக்களுக்கும் மூன்றாவது தடுப்பூசி 80 வீதமான மக்களுக்கும் நான்காவது தடுப்பூசி ஐம்பது வீதமான மக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என காiரீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா பஸீர் தெரிவித்தார்.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சுகாதார வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் பிரதேச தொண்டர் அமைப்புக்களும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.