போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

0
158

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடைந்து மாவட்ட செயலரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு பேரணியில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அரசாங்க
வைத்திய சங்க பிரதிநிதிகள் மற்றும. தாதிய உத்தியோகத்தர்கள் தாதிய சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.