இன்று முதல் பெற்றோலிய விநியோக சேவை புறக்கணிப்பு

0
143

பெற்றோலிய விநியோகத்தர்கள் இன்று முதல் விநியோக சேவையை புறக்கணிக்கவுள்ளனர். இதனால், எரிபொருள் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். செயல்பாட்டு கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45 வீத தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் விநியோக சேவையை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தவிர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.