அம்பாரை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் -02 கிராமத்தில் நேற்று இரவு தீ விபத்து காரணமாக குடியிருபப்பு வீடு ஒன்று எரிந்துள்ளது.
இவ் தீ அனர்த்தமானது விநாயகபுரம் 02 கப்புகணார் வீதியைச் சேர்ந்த வில்கரன் கிரோஜினி என்பவரது வீடே இவ்வாறு நேற்று 8.00 மணியளவில் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதுடன் வீட்டில் இருந்த 50ஆயிரம் பணம் மற்றும் உடைகள் கட்டில்கள் தளபாடங்கள் என்பனவும் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
இவ் தீ அனர்த்தம் தொடர்பாக அப்பகுதி கிராம சேவையாருக்கு தகவல் வழங்கப்பட்டு இருந்ததுடன் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடியினையும் இன்று காலை பதிவு செய்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.
இவ் தீ அனர்ந்தம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அப்பகுதி கிராம சேவையாளர் இணைந்து திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.