அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தேசிய உளவளத்துணை ஆற்றுப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இன்று இடம்பெற்று இருந்தன.இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.
அனைவரினதும் உளநலம் மற்றும் நல்வாழ்வை உலக அளவில் முதன்மைப்படுத்துவோம் எனும் கருப்பொருளின் ஊடாக பிரதேச செயலக உளவளத்துணைப் பிரிவின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான செயலமர்வாக இடம்பெற்று இருந்தன.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கிராம மட்ட மக்களோடு பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு எவ்வாறு இவ் உளவளத்துணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது என்பது தொடர்பான விரிவான சிறப்புரை ஒன்றினையும் ஆற்றியிருந்தார்.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சே.சதிசேகரன் சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சசிந்திரன் கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன் சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.