சாரணர் சங்கத்தின் 110 ஆவது ஆண்டு நிறைவில், யாழ்ப்பாணத்தில், 110 குடும்பங்களுக்கு, பயிர் விதைகள் வழங்கல்

0
191

இலங்கை சாரணர் சங்கத்தின் 110 ஆவது ஆண்டு நினைவு கூறும் வகையில், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் ஒத்துழைப்புடன், 110 குடும்பங்களுக்கு, பயிர் விதைகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட திரிசாரணர் குழாமினர், அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தில், ஜே-91 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு, வீட்டுத் தோட்டம் செய்வதை ஊக்குவிக்கும் முகமாக, ‘ஒவ்வொரு செடியும் பசி தீர்க்கும்’ எனும் தொனிப்பொருளின் கீழ், 110 குடும்பங்களுக்கான பயிர் விதைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆனையாளர் இ.தவகோபால், ஜே-91 கிராம உத்தியோகத்தர் திருமதி வளர்மதி கௌரீபாலன், பொருளாதார உத்தியோகத்தர் திருமதி சுபாஜினி தனதீபன் மற்றும் திரிசாரணர்கள் கலந்து சிறப்பித்தனர்.