இலங்கை சாரணர் சங்கத்தின் 110 ஆவது ஆண்டு நினைவு கூறும் வகையில், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் ஒத்துழைப்புடன், 110 குடும்பங்களுக்கு, பயிர் விதைகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட திரிசாரணர் குழாமினர், அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தில், ஜே-91 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு, வீட்டுத் தோட்டம் செய்வதை ஊக்குவிக்கும் முகமாக, ‘ஒவ்வொரு செடியும் பசி தீர்க்கும்’ எனும் தொனிப்பொருளின் கீழ், 110 குடும்பங்களுக்கான பயிர் விதைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆனையாளர் இ.தவகோபால், ஜே-91 கிராம உத்தியோகத்தர் திருமதி வளர்மதி கௌரீபாலன், பொருளாதார உத்தியோகத்தர் திருமதி சுபாஜினி தனதீபன் மற்றும் திரிசாரணர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Home வடக்கு செய்திகள் சாரணர் சங்கத்தின் 110 ஆவது ஆண்டு நிறைவில், யாழ்ப்பாணத்தில், 110 குடும்பங்களுக்கு, பயிர் விதைகள் வழங்கல்