



கோப்பாய் பொலிசாரினால் இன்றுதிடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதை பொருட்களுன் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாண பிரதி போலீஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இன்றைய தினம் கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது
சுற்றி வளைப்பின் போது ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 24 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாககோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்