கோப்பாய் -கைதடி வீதியில் வெடிப்பு சம்பவம்! இருவர் காயம்.

0
163

கோப்பாய் கைதடி வீதியில் வெடிப்பு சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது

நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இன்றைய தினம் கோப்பாய் கைதடி வீதியில் மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு  

 சிரமதான பணியில் ஈடுபடும்போது  மர்ம பொருள் ஒன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றதோடு 

குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது நீர்வேலி ஊரெழு பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள்

 இருவர் காயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சம்பவம்தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வெடிப்பு சம்பவம் தொடர்பில் காயமடைந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்

தாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பகுதியில் புல்லு வெட்டும் பணியில் ஈடுபடுவதாகவும் இன்றைய தினம் வழமை போல் தாங்கள்  மரம் நடும் போவதற்காக புல்லு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென  மர்மப் பொருள் வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர் குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.