ஆதாரம் நூல் வெளயீடும் ஆவணப்படம் திரையிடலும் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் இடம் பெற்றது.

0
265

காத்தான்குடி ஆத்மா ஜாபிர் எழுதிய ஆதாரம் நூல் வெளியிடும் ஆவணப்படம் திரையிடலும் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் இடம் பெற்றது.
சிறகு நுனி கலை ஊடக மையத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆத்மா காபீர் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது

இலங்கையின் கிழக்கு வடக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்களுடைய உறவை மீள் நிர்மாணிப்பதற்கான ஆவணமாக இந்த நூல் அமையப் பெற்றுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு வைபவத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்

இதில் காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் ஜெசீம் காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன் உட்பட சமூக ஆர்வலர்கள்
சமூக செயற்பாட்டாளர்கள் தமிழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இதன் போது ஆத்மா ஜாபீர் தயாரித்த நொச்சிமுனை தர்கா சகவாழ்வின் கடைசி கோட்டை எனும் ஆவணப்படமும் திரையிடப்பட்டது

;