யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில், நேற்று இரவு, இனந்தெரியாத நபர்களால், படகு தீ வைத்து எரியூட்டப்பட்டது. நேற்று இரவு 7.00 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர், படகிற்கு தீ வைத்ததுடன், மீன்பிடி உபகரணங்களையும், வாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம், அங்கு வீடொ ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியது. இந்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.