புலம் பெயர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு

0
159

சர்வதேச புலம் பெயர் தினத்தை முன்னிட்டு புலம் பெயர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவகத்தினால் மட்டக்களப்பு சத்திருக்கொண்டானில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன், மற்றும் சிரேஸ்ட்ட வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஜெயசாந்தி
ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களையும். விளக்கங்களையும் வழங்கினர்.

ஊதியத் திருட்டு ஒரு குற்றமாகும் அதன் விளைவுகளைப் புறக்கணித்தல் அதைவிட பாரதுரமான குற்றமாகும், உலக ஊழிய சந்தையில் குறிப்பாக குறைந்த தேர்ச்சி மற்றும் குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஊதிய திருட்டு அதிகரித்து வருகின்றது.

குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்தை மறுத்தலானது ஒழுங்கற்ற மற்றும் முறைசார புலம்பெயர்வுக்கு வழி வகுக்கும்.

பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஆலோசனைக்கு உத்தரவாதம் அளித்தல் அரசின் பொறுப்பாகும். புலம்பெயர் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் சட்டங்கள் மற்றும் சர்வதேச நெறிமுறைகளுக்கு இணங்கியொழுகி மனித விற்பனைக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

என அந்நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன் இதன்போது தெரிவித்தார்.