வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், வவுனியா செட்டிகுளம் நித்திய நகரில் போராட்டம்

0
192

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று, வவுனியா செட்டிகுளம் நித்திய நகரில், 5 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 11.00 மணியளவில், வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தில் இடம்பெற்ற போராட்டத்தில், ஐக்கிய இலங்கைக்குள், ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுத்தப்பட்டது. இதன் போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டது.