தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 265 பேர் கைது

0
215

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 265 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 48 வாகனங்களை கைப்பற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.