பசறை பஸ் விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

0
100

பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.

பதுளை, பசறை 13ஆம் கட்டை பகுதியில் 2021 மார்ச் 20ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியாகினர். சுமார் 32 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் அந்தோனி நோவா (வயது – 32) என்பவரும், அவரது மனைவியான பெனடிக் மெடோனோ (வயது 31) உயிரிழந்தனர். அவர்களின் மகளே யூஜீனியா.

பெற்றோர் உயிரிழக்கும்போது அவர் தரம் மூன்றில் கல்வி பயின்றுக்கொண்டிருந்தார்.