மாமனிதர் கிட்டினன் சிவநேசனுக்கு, அஞ்சலி!

0
231

மாமனிதர் கிட்டினன் சிவநேசனின், 15 ஆம் ஆண்டு நினைவேந்தல், இன்று, யாழ்ப்பாணம் வடமராட்சி, கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், முதல் நிகழ்வாக, பொது ஈகைச் சுடரை, மாமனிதர் கிட்ணன் சிவனேசனின் புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றியை தொடர்ந்து, அவரது திரு உருவ படத்திற்கு, மாமனிதரின் புதல்விகள், மலர் மாலை அணிவித்தனர்.

அதன் பின்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் உறவுகள், ஆதரவாளர்களால், மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாமனிதர் கிட்டினன் சிவநேசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்த காலத்தில், 2008 ஆம் ஆண்டு இதே நாளில், மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து, சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில், படுகொலை செய்யப்பட்டார்.