கிளிநொச்சி ஏ-9 வீதிக்கு அண்மித்த ஆனையிறவுப் பகுதியில், வணிக சுற்றுலா மையம் அமைந்துள்ள வளாகத்தில் ஆபத்தான நிலையில் எறிகணைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற வெடிபொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.


