ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுடன் இணைந்தால் அவருக்கு நிதி அமைச்சு கிடைக்கும் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை வளைத்துப்போடும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைவிடாது தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலின்படி ரணிலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா ஆகிய மூவரே தேவைப்பட்டனர்.
மனுஷ, ஹரின் ஆகியோர் ஏற்கனவே அரசுடன் இணைந்து விட்டார்கள். இந்நிலையில் ஹரின் பெர்னாண்டோ, ரணிலின் பணிப்புரைக்கமைய ஹர்ஷவையும் அரசுடன் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகிறது.