28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கால்நடைகளை கடத்தியோர் கைது

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கால்நடைகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கால்நடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 11 மாடுகள் மற்றும் 12 ஆடுகளே மீட்கப்பட்டுள்ளன.

புத்தளம் மற்றும் யாழ். ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாவகச்சேரி கச்சாய் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்களை இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும், கால்நடைகளை பண்ணை ஒன்றில் வைத்து பராமரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles