மட்டக்களப்பு பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தினால் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

0
195

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பத்மநாபா மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் இந்த சுற்றுப்போட்டியை நடாத்துகின்றது.
இதன்போது மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்திற்கும் பத்மநாபா மக்கள் முன்னணிக்கும் இடையில் குறித்த சுற்றுப்போட்டியை நடாத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கூட்டத்தில் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் தலைவர் செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.