அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 375 துப்பாக்கிகளின் உரிமத்தை இரத்துச் செய்ய தீர்மானம்!

0
174

அரசாங்கத்தினால்  வழங்கப்பட்ட 375 துப்பாக்கிகளின் உரிமத்தை இரத்துச் செய்து அந்த துப்பாக்கிகளை திரும்பப் பெற விவசாய அமைசச்சு முடிவு செய்துள்ளது.

 வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக வடமேல் மாகாணத்தில் உள்ள தென்னைப் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.

பயிர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்படாது காணப்படுவதனையடுத்தே  அமைச்சு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.