மன்னாரில் இப்தார் நிகழ்வு

0
179

மன்னார் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்துகொண்டார்.

நிகழ்வில் இப்தார் நிகழ்வுக்கான விசேட உரை இடம்பெற்றதோடு சர்வமத தலைவர்களின் விசேட உரைகளும் இடம்பெற்றன.