இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட பிரெட்னிசலோன் கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
கண் சத்திர சிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் இந்த சொட்டு மருந்தை பயன்படுத்திய மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் இந்த மருந்தின் பாவனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சொட்டு மருந்தைப் பயன்படுத்திய மூவர் தொற்றுக்கு இலக்கானமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்தே இந்த மருந்துப் பாவனையை இடைநிறுத்த சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.