இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங், தெற்காசியாவின் மிக உயரமான தாமரைக் கோபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு ஸ்கை டைவிங் வெற்றியாளர்கள் இலங்கைக்கு வருகைதந்து கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரைக் கோபுரத்திலிருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
இந்த செயற்திட்டம் சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் எனவும், அதன் மூலம் உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு இலங்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.