சூடானிலிருந்து 14 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

0
115

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும், 2வது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவைச் சென்றடைந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.