மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்
பாடசாலையில், தொன்மை போற்றும் வரலாறு பாட கண்காட்சி இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, பிரதி வலயக் கல்விப்
பணிப்பாளர் மகேந்திரகுமார் கலந்து கொண்டார்.
பாடசாலையின் வரலாறு பாட ஆசிரியர் ஜெஸ்மி நயனனின்; வழிநடத்தலுடன் கண்காட்சி இடம்பெற்றதுடன், கண்காட்சியில் வரலாறு சான்றுப்பொருட்கள், பண்டைய கால சின்னங்கள், இலச்சினைகள், ஓலைச்சுவடிகள், தொல்பொருட்கள்,
நாணயங்கள், பண்டைய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
அயல் பாடசாலையின் மாணவர்கள் ,ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டதுடன், வரலாறு பாட கண்காட்சி நிகழ்வில் கோட்டக் கல்வி பணிப்பாளர் ஜெயக்குமணன் உட்பட உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள்,
பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வரலாறு பாட கண்காட்சி இடம்பெற்றது.