மட்டக்களப்பு போரதீவுப்பற்று 38 ஆம் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்து

0
242

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று 38 ஆம் கிராமத்தில் இன்று உழவு இயந்திரம் விபத்துக்குள்ளான
நிலையில் உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
இன்று காலை மண்டூர் தம்பலவத்தை கிராமத்தில் இருந்து போரதீவுப்பற்று 38 ஆம் கிராமத்துக்கு வேளான்மைக்கு
உரம் ஏற்றிச் சென்று திரும்பியபோது விபத்து சம்பவித்துள்ளது.
உழவு இயந்திரத்தின் முன் சக்கரத்தின் வார் கம்பி உடைந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக
அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.