பொதுமக்களுக்கு வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
180

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய, வடக்கு, வட மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள், சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைய போதுமானளவு நீரை பருகவேண்டும் என்பதோடு, களைப்படையும் நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு, வெப்பமான காலநிலையின்போது வயது முதிர்ந்தவர்களும் நோயாளிகளும் சிறுவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.