மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள்
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாண, மாவட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட அரச திணைக்களங்களில்
தொழில் புரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல், மட்டக்களப்பு மாவட்டத்தில் குருமன்வெளி, மண்டூர், குருக்கள்மடம், அம்பலாந்துறை, சந்திவெளி, திகிலிவெட்டை போன்ற பிரதேசங்களை இணைக்கும் ஆற்றின் இடையில் இருக்கும் பாதைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களை நீக்குதல், பண்ணையாளர்களின் கால்நடைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில கூட்டமைப்பினர் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இப்பிரச்சினைகளைக் கவனத்திற்கொண்ட ஆளுநர், குறித்த இடர்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக
உறுதியளித்தார்.
Home கிழக்கு செய்திகள் கிழக்கு மாகாண பிரச்சினைகளை, ஆளுநருக்கு நேரில் சென்று பட்;டியலிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு